Posts

Showing posts from February, 2024
Image
  தோழன் ராசா கவிதை   ---- நீயா நானா அதிக வலிமை உனக்கா எனக்கா உளி உரும கர்ஜித்தது தூரிகை செதுக்கலால் புது உருவம் உலகுக்கு அளிக்கிறேன் வண்ணங்களால் எண்ணங்களை செதுக்குகிறேன் இரும்பு கரம் கொண்டு அல்லதை அகற்றுகிறேன் நளினமாய் உயிர்ப்பை தத்துருபிக்கிறேன் எனது வன்மையில் மென்மையுண்டு எனது மென்மையுள் உண்மையுண்டு வண்ணங்கள் இல்லையேல்                                                                                                                                          நீ   வெறுமை சுத்தியலில் சக்தி இன்றேல்                 ...
சேலம் சௌ . காவியா கவிதை நட்பு ********* மனதோடு காலமெல்லாம்   மலர்ந்தே இருக்கும் பூ பாசமும் அன்பும் பிணைத்துத் தொடுத்த பூ நெஞ்சிலே நிறைந்து நினைவினில் வளரும் பூ உற்ற உறவுகளுக்கும்   மேலே நின்ற பூ உயிருக்குள் கலந்த   உன்னதமான நட்பு   வார்த்தைகளால் சொல்ல முடியாது வரைவதற்கு             வடிவம் கிடையாது எண்ணங்களை   எழுத   இயலாது புரிந்து கொண்டால்   பொய் சொல்ல வராது தொலைவில் இருந்தாலும் நினைவு அழியாது காலம் கடந்தாலும்   கண்ணை விட்டு மறையாது   உண்மையான நட்பு உயிர் போகும் வரை பிரியாது   வானவில் மின் இதழ்  பிப்ரவரி 2024  இதழில் இடம்பெற்ற கவிதை
  வெள்ளகோவில் திவாகர் கவிதை   ஒரு நாள் நானும் ஓர் கூடு கட்டுவேன் ------------------------------------------- குருவியாய் பிறந்திருந்தால் மரத்தில் கூடு ஒன்று கட்டி இருப்பேன் மனிதனாய் பிறந்ததால் மரத்தில் கூடு கட்ட அறிவில்லை   அடைய மண் குடிசையோ உடையோ ஏதுவாகினும் உண்ண கூழோ களியோ என் எண்ணப்படி வாழ இசைந்த பெற்றோர்   வாழ கோபுரமென கூட மாடம் விரைந்து செல்ல தேரென கார் கட்ட கரை வேட்டி பட்டு பீதாம்பரம் கிட்ட வந்து பேசிடுவர் பெண் வீட்டார்   பள்ளி பருவம் கழிந்தது துள்ளி விளையாடும் மனமழிந்து தாய் தந்தை பரிசளித்த செந்நிற பிஞ்சு பாதம் தேய்ந்து போயும் இளைப்பாற களைப்பாற ஓய்ந்துட்கார ஓர் கூடுமில்லை   உறுதி கூறுகிறேன் என்றாவது ஒருநாள் நானும் ஓர் கூடு கட்டுவேன் ஒருத்தி என்னை நம்பி வந்தவளுக்காக கருத்தால் என் மனதை கருக்கியவர்களுக்காகவு ம்   மனமும் மாறுமோ தகப்பன் ஆயின் மனமாடியடங்கிப்பின் ஆறு அடியும் சொந்தமில்லை பின் ஏதுமாகிப்பின் என்ன பயன்  
இளையவன் சிவா கவிதை 1 எரியும் கூட்டுக்குள் சிசுக்கள் கதறிட கருகும் வீடெங்கும் கதறல் நீண்டுவர தப்பாத இலக்குகளில் குண்டு மழை பெருக பறவைகளின் வழித்தடத்தில் ஏவுகணைகள் திசை நிரப்ப காணும் உயிர்களையே மண்ணும் புழுவெனவே துப்பாக்கிகள் தோள் உயர்த்த நிலையற்றதில் நிலைத்திட்ட மரணத்தைக் கண்ணுறா பேராசை மனதில் பெருமூச்சுக்கும் வழியற்று பிதற்றவும் முடியாமல் சுருண்டு விடுகிறது மனிதம் 2 அனுபவங்கள் தீட்டித் தீட்டி அகமெலாம் ஒளிவீசிட நில்லாத வாழ்வின் பாடம் நடத்திடும் தேர்வின் வழியே பாதைகள் திறந்திடும்போதும் பயணங்கள் தொடர்ந்திடும்போதும் ஆசையின் ஊஞ்சலிலே ஆடிடும் எண்ணமதை ஏடென்றும் எழுத்தென்றும் வடித்திடும் காவியத்தில் நிலைத்திடட்டும் நேசமும் நிம்மதியும் . இளையவன் சிவா வானவில் மின் இதழ் பிப்ரவரி 2024  இதழில் இடம்பெற்ற கவிதை

மௌனங்களை உடைப்போம்

  யாரேனும் இந்த மௌனத்தை தகர்த்து இருந்தால் ?               இந்த வாக்கியத்திற்கான பொருள் என்ன என்று யோசனை வருகிறது அல்லவா ? இது ஒரு சிறிய நூலின் தலைப்பு . சிறிய நூல் என்றால ும் இதனுடைய   பேசுபொருள் மிக மிகக் கனமானது .         குழந்தைகளும் சின்னஞ்சிறு மனிதர்கள் தான் . அவர்களுக்கும் அவர்களது உடல் , மனம் குறித்த அடிப்படை உரிமை   இருக்கிறது . பட்டாம்பூச்சிகள் போன்ற குழந்தைகளைக் கசக்கி , தகாத உறவுகளுக்குள் ஆட்படுத்தும் கண்ணியமற்ற ஒரு செயலான , பாலியல் கொடுமைகளைப் பற்றி தான் இந்த நூல் பேசுகிறது .           இணைய கூட்டங்களில் இந்த நூலைப் பற்றி நான் பேசிய பிறகு , என் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் , நான் அதிகம் பேசி பழக்கம் இல்லாத நட்புகள் என்று   சில நண்பர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது .           கிட்டத்தட்ட அனைவரிடமும் யாரிடமும் சொல்லப்படாத , ஒருவருக்கும் தெரிந்து விடக்கூடாது என மனதிற்குள் பல ஆண்டுகளாக .. ஒரு கெட்ட கனவாக மறைத்து   வைக்க...