Posts

Image
  கவிஞர் இளையவன் சிவா முக நூலில் எழுதிய நூல் அறிமுகம் உயிருக்குள் தாகம்   தேவயானி     /   கவிதைத் தொகுப்பு   /   வெளியீடு செம்மை உடுமலை   முதல் பதிவு செப்டம்பர் 2011  /   இரண்டாம் பதிப்பு ஜனவரி 2024  /   பக்கம் 80  /    விலை ரூ 80   வளைக்கரங்கள் வாழ்வை நேசிக்கத் துவங்கினால் கலையின் வழியே காட்சிகள் புலப்பட்டு அலையின் முயற்சி என கவிதைகள் விளைந்து மனதினை நிறைக்கும்.   மொழியின் மீதான நேசத்தின் நீட்சியில்   உலகின் வழிகளை ஒருங்கிணைத்து இயற்கையின் வளங்களை பாதுகாக்கும் எண்ணத்தை விதைக்கும் நேசச் சொற்களின் அணிவகுப்பில் வந்து விழுகின்றன வார்த்தை அருவிகள்.            தமிழ் மீதான தணியாத காதலை தன்னம்பிக்கை நிறைத்து தரணியை ஆண்டிட இன்னொரு பிறப்பெடுக்க வைக்கும் ஆசையின் தூண்டலை இல்லறத்தை நல்லறமாக்கிடத் துடிக்கும் இளமையின் எண்ணங்களை நாளும் பொழுதும் நிம்மதி கூட்டும் நிலாவின் முற்றத்தை தன்னை வளர்த்தெடுத்த நதியின் வாழ்க்கைப் போக்கை இயற்கை மீதான நேசத்தை என உயிருக்குள...
 கடத்தூர் ஜெயராமன் வசந்தமே வருக வருக இனிய உணர்வோடு கனியாய் சித்திரை வசந்தமாய் வருகிறது வாருங்கள் வாவென கூடி அழைப்போம் சனநாயகம் வாழ விருந்தாளியாய் வேட்பாளர்கள்   வாக்குகளை பெற வீடு வரும் நேரம் மக்கள் விழிப்புணர்வு பெற தேர்தல் ஓர் வசந்தம் வாக்குகள் தரும் அரசுரிமை அது வீட்டின் வாயிலில் அவர் பெற நீவீர் தர   கோட்டையாளவர் மக்கள் நலமனைத்தும் வீட்டையடையின் சனநாயக தேர்தல் வசந்தம் அரசு தரும் இலவசம் தருக வாக்கு எனும் ஓலம் அடிமைகள் வாழும் நாட்டில் அரசன் முழங்கும் முரசம் கட்சியில் இருந்து தருவதானால் வந்த வழி கணக்குகள் என்ன ?  கசானாவில் எனில் அது மக்கள் உரிமை தந்த பின்பே   ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் வேண்டான் விரும்பியவன் எனும் வேற்றுமையில்லை ஆள்பவன் எல்லாம் அரசனுமில்லை அரசியுமில்லை அனைத்தும் துறந்தவரில்லை மக்கள் வேண்டியபடி விடியல் பெற வந்த தேர்தல் ஓர் வசந்தம்   நினைத்தவரெல்லாம் உனையாள விடாத சனநாயக உரிமைப் படி உனைத் தேடி சலுகைகள் உன்னில்லம் வரவோர் அரசைப் பிடி வந்து விட்டார்கள் வாசல் படியென வாக்களித்துவிட்டால் ...
பாரியன்பன் நாகராஜன் புதிர் நானொரு கதை   சொல்லத் தொடங்குகிறேன் . சருகுகளையும் பூக்களையும்   உதிர்த்து ஆவலாய்   கதை கேட்கத் தொடங்குகிறது மரம் .   கதையின் முடிவில்   நல்லதொரு திருப்பமாய் முடிச்சொன்றை வைத்து புதிர்ப்போடுகிறேன் . அதுவரை இல்லாத   பெரும் புதிராய் ஒரு கிளையை   முறித்துக் கொள்கிறது   மரம் .   அத்துடன் கதையை   நிறுத்திக் கொள்கிறேன் . பெருமுடிச்சை அவிழ்த்து முடிவு தெரிந்திடாத மரம் பின்பொருநாள் ஒரு மழைக்காலத்தில் அடைமழையிடம் என் கதையை விடைகண்டறிய சொல்லியிருக்கும் போல ...   விடை தெரியாத அடைமழை ஆற்றின் வழியே கரைப் புரண்டோடும்   வெள்ளத்தில் என்னைக்   கொண்டு சேர்த்தது கடலினிடத்தில் .   அவ்வமயம் விடைதெரியாத மரத்தின் ஒரு முறிந்த கிளையும் விடைதெரிந்த நானும் எல்லாமும் தெரிந்து   வைத்திருக்கும் பெருங்கடலில்   கட்டுமரங்களாய் மிதந்துக் கொண்டிருக்கிறோம் .                       ...
Image
நூல் அறிமுகம் தீராக் கனவை இசைக்கும் கடல்    ஆசிரியர்: இளையவன் சிவா அறிமுகம்  :   தா.தெய்வானை ஒரு கவிஞனின் மனதுக்குத் தான் இயற்கைக் கொடுத்த எல்லாப் பொருட்களும் அழகாகத் தோன்றும். கடல் அலைகளை மற்றவர்கள் இரைச்சல் என்பார்கள் கவிஞர் இளையவன் சிவா அந்த இரைச்சலை இசை என்கிறார். அது கடலின் கனவு என்கிறார். அதுவும் தீராதக் கனவு என்கிறார். எந்த உலகம் உள்ளவரை கடல் இருக்கும் ஆழ்கடலில் புதைந்த பொருட்களைப் போல மனிதனின் மனதுக்குள்ளும் ஆயிரமாயிரம் எண்ணங்கள் புதைந்திருக்கும் அந்த எண்ணக் கனவுகளைக் கடல் அலையின் சங்கீதம் போல கவிதைகளாய் பதிவு செய்திருக்கிறார்.   ' வீடுகளில் எல்லா அப்பாக்களுக்கும் அம்மாக்கள் சற்று மட்டம் தான்... எத்தனை வேலைகளை உதவிகளை செய்தாலும் பாராட்டு பெற முடிவதில்லை '. எதார்த்தமான வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய முதல் கவிதையே நெஞ்சில் இசை பாடிக் கொண்டிருக்கிறது.   மனித வாழ்வில் சரி புற்று ஒரு பறவையாய் மாறி சுதந்திரத்தை அனுபவிக்க என்னும் ஒரு மனிதனின் கற்பனை அதிகமானது அந்த கற்பனையிலும் இடி விழுந்தது போல்   ' இன்னும் மிச்சம் இர...
Image
  இசை என்னும் இன்ப வெள்ளம் நேர்காணல்  :   தா . தெய்வானை உதவி :  இரா . பவித்திரா   கேள்வி : வணக்கம் தியாகராஜன் இந்த மடத்துக்குளம் பகுதியி ல் தம்பதியாய் இசைப்பயணம் நீங்கள் மட்டும்தான் . அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் . பதில் : நான் மடத்துக்குளம் அரசு மேல்நி லைப்பள்ளி யில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன்   நாதசுர ஈடு பாட்டால்   சின்னச் சின்னக் கச்சேரிகளுக்கு   உதவியாளராகப் போய் வந்தேன் பின்பு கரூரில் உள்ள அரசு இசைப்பள்ளியில்   மூன்று ஆண்டு கள் டிப்ளமா   எனும் பட்டயப்படிப்பு படித்து முறையான அரசு சான்றிதழ் பெற்று   வெளியில் வந்தேன் . பின்பு   அனுபவம் மிக்க கலைஞர் களுடன் சிலவருடங்கள்   வாசித்தேன்   பின்பு அறிமுகம் ஆக ஆக   நான் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன் கேள்வி :      தனியாகக் கச்சேரி ஒப்பந்தம் செய்தால் உங்களுக்குத் துணையாக யாரை அழைப்பீர்கள் ? பதில் :     என் உறவினர்கள் என்னுடன் படித்த சக மாணவர்     இவர்களை வெளியூரில்   இருந்து அழைத்துக் கொள்வேன்   க...